கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
குறித்த விபத்து தொடர்பாக தற்போது, கொழும்பு நோக்கி பயணித்த இராஜாங்க அமைச்சரின் ஜீப் வண்டி முன்னால் பயணித்த கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியதினாலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சாரதி படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமண விருந்துபசாரத்துக்கு சென்று திரும்பும் வேளையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் திருமண விருந்துபசாரத்துக்கு சென்று திரும்பும் வேளையிலேயே இவ்வாறான விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கமைய தற்போது அமைச்சரின் உறவினரின் பதிவு மூலம் அறிந்துகொள்ள கூடியதாக காணப்படுகின்றது.
குறித்த பதிவில்,
“சனத் நிஷாந்த மாமா என்ன நடந்தது என்று கற்பனை செய்கூட பார்க்க முடியவில்லை. எனக்காக என்னைப் பார்க்க வரும் வழியில் இவ்வாறு நடந்துவிட்டது. எனக்கு இதை தாங்கிக் கொள்வது கடினமாக இருக்கின்றது. நிம்மதியாக இருங்கள் மாமா’ என்று பதிவிட்டு லகிந்து இசான் என்பவர் பதிவிட்டுள்ளார்.
அந்த இளைஞனின் குறிப்பின்படி, விபத்து ஏற்படுவதற்கு முன்பு ‘அமைச்சர்’ ஒரு ‘திருமண விழாவில்’ கலந்துகொண்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.