பௌத்த பிக்குவாக வேடமிட்டு வாழ்ந்து வந்தவர் ( 20 வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளி ) கைது !
20 வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளி ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தனியார் வங்கி ஒன்றின் 24 கிளைகளில் போலி தங்க நகைகளை அடகு வைத்த குற்றச்சட்சில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஜயந்த அலுவிகார என்ற குறித்த நபர் பௌத்த பிக்குவாக வேடமிட்டு வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவிசாவளை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் அவருக்கு எதிராக 20 பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.