மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் சுதந்திர தின கரிநாள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு எதிராக 17 பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.30 மணியளவில் வீடுகளுக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் இந்த தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.
இன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க தலைவி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆகியோருக்கு எதிராக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று நடைபெறும் ஆர்ப்பாட்ட பேரணியை தடுப்பதற்காக மாவட்டம் பூராகவும் உள்ள பொலீசார் மட்டக்களப்பு நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
.