மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பாரிய கேள்வி எழுகிறது.
மட்டக்களப்பு கரவெட்டி மகிழவட்டவான் பிரதான வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாலத்தின் ஒரு பகுதி தாள் இறங்கி உள்ளது. மேற்படி பாலம் கம்பிகள் இன்றிப் போடப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது?
இதனால் அப் பகுதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்த பாலம் மட்டுமல்ல அண்மைக் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டங்கள் பல ஏட்டிக்குப் போட்டியாக நடைமுறைப்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
ஆண்டு இறுதியில் உள்ளூராட்சி சபைகளின் சேமிப்பில் இருந்த பணத்தை விடுவித்து ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு அவசர அவசரமாக போடப்பட்ட பல வீதிகள் வாடிகான் அமைப்புக்கள் இன்றி போடப்பட்டதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது.
இவ்வாறு போடப்பட்ட வீதிகள் வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த காரர்களிடம் இருந்து கொமிசன் பெறுபவர்கள் வீதிகளின், பாலங்களின் தரம் குறித்து கவனம் செலுத்தாததால் வருடாந்தம் பல இலட்சம் அரச நிதி வீண் விரையமாவதோடு ஊழல் செயற்பாடுகளும் அதிகரிக்கிறது.
கடந்த காலங்களில் நடைபெற்ற இது போன்ற செயற்றிட்டங்களே இந்த நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு செல்ல காரணமாக அமைந்தது.
இதனால் இந்த நாட்டில் உள்ள மக்களின் வரிப் பணம் மீண்டும் மீண்டும் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளால் வீணடிக்கப்படுகிறது. இதனால் நாட்டில் வாழும் மக்களே வறுமையில் வாழ வேண்டியுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த தவறிவிடுகின்றனர்.