வடகிழக்கில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் அராஜகங்களுக்கு எதிராக வடகிழக்கில் உள்ள முஸ்லீம் சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் பொலீசார் மேற்கொண்ட அராஜகத்திற்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
வவுனியா வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூசையில் ஈடுபட்டிருந்த சைவ அடியார்களின் பூசை வழிபாடுகளை பொலீசாரின் அராஜகத்தின் ஊடாக தடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புக்கான அறிகுறியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இவ்வாறான வன்முறைகளை, மனித உரிமை மீறல்களை வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் சமூகமாக ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
கொவிட் தொற்றின் போது முஸ்லீம் மக்களின் ஜானாசா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்த கட்சியாக தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்ததன் விளைவாக அதற்கான தீர்வை பெற முடிந்தது.
அதேபோல் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பொலீசாரின் இது போன்ற அராஜகங்களுக்கு எதிராக முஸ்லீம் சமூகமும் எங்களுடன் கைகோர்த்து கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.
நாங்கள் வடகிழக்கில் தமிழ் பேசும் சமூகமாக ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் எமது வடகிழக்கில் இருக்கின்ற கலை கலாசார பண்பாட்டு மொழி பொருளாதாரம் அனைத்தும் அழிக்கப்பட்டு ஒரு இன அழிப்பு நடைபெற்று விடும்.
எனவே இவ்வாறான எதிர்ப்புக்களை இனமாக மதமாக வடகிழக்கு சமூகமாக ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.
என தெரிவித்தார்