மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலாமடு வாவி ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வு நடைபெறும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஆற்று மணல் அகழ்வுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆற்றுக்குள் உழவு இயந்திரங்களை பயன் படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட முடியாது என்ற சட்டம் உள்ள நிலையில் மேற்படி சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெற்று வருகிறது. தற்போது மாவட்டத்தில் மண் அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஆற்றுக்குள் உழவு இயந்திரங்களை இறக்கி சட்டவிரோத மணல் அகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளதாக விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல விவசாய நிலங்கள், கால்வாய்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.